Saturday 27th of April 2024 09:32:30 AM GMT

LANGUAGE - TAMIL
-
விசேட அதிரடிப்படையினர் பதினொருவருக்கு கொரோனா! பொலிஸார் மூவருக்கு கொரோனா!

விசேட அதிரடிப்படையினர் பதினொருவருக்கு கொரோனா! பொலிஸார் மூவருக்கு கொரோனா!


தென்னிலங்கையில் விசேட அதிரடிப்படையினர் 11 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இதனால் ராஜகிரிய, களனி, களுபோவில பகுதிகளில் உள்ள விசேட அதிரடிப்படையினரின் முகாம்கள் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நாரஹேன்பிட்டிய பொலிஸ் வைத்தியசாலை, சீதுவ பொலிஸ், மிரிஹான பொலிஸ் நிலையங்களில் பொலிஸார் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து பொலிஸ் தரப்பில் 345 பேர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராகம வைத்தியசாலையில் ஆறு மாதக் குழந்தைக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹம்பாந்தோட்டை மீன்பிடித் துறைமுகத்திலும் மீனவர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE